தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் 49 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் – காரணம் இது தான்! ஷாக் ரிப்போர்ட்!

0
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் 49 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - காரணம் இது தான்! ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் 49 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - காரணம் இது தான்! ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் 49 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் – காரணம் இது தான்! ஷாக் ரிப்போர்ட்!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி இன்று ( மார்ச் 15) இரண்டாவது தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. அதில் 49 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

பொதுத்தேர்வு

தமிழகத்தில் திங்கள்கிழமை (மார்ச் 13) முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி இருக்கிறது. முதல் நாள் தமிழ் முதல்தாள் தேர்வுக்கு 49,500 மாணவர்கள் வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (மார்ச் 15) ஆங்கில பாடத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றது. அது குறித்து மாணவ மாணவிகள் கூறுகையில், தமிழ் பாடத்தை விட இந்த தேர்வு எளிமையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் முதல் தேர்வுக்கு வராத மாணவர்கள் இந்த தேர்வுக்கும் வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் கல்வியறிவு விகிதம் 77% ஆக உயர்வு – வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!

இந்த மாணவர்கள் ஏற்கனவே நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் 11 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த பாட தேர்வுகளையும், 12 ஆம் வகுப்பு பாட தேர்வுகளையும் சேர்த்து எழுத வேண்டும் என்பதால் தேர்வுக்கு வரவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த மாணவர்கள் அடுத்து வரும் தேர்வுகளில் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!