தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 2 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் தொடர் மழையால் பல இடங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரமே மொத்தமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மேலும், வருகிற நாட்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை :
தமிழகத்தில் கோடை காலத்தில் ஏற்பட்ட வெப்பச்சலனத்தால் தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் தினமும் மழை பொழிந்த வண்ணமாக உள்ளது. ஏற்கனவே, பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரமே சீர்குலைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பெய்து வரும் தொடர் மழையாலும் இயல்பு நிலை மாறி மக்கள் அதிக சிரமப்பட்டு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பில் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்ற மொத்த விவரங்களும் அதில் கூறப்பட்டுள்ளது.
கனமழை பெய்ய இருக்கும் பகுதிகள் :
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும். சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக பள்ளிகளில் சுதந்திர தின விழா போட்டிகள் – முக்கிய தகவல் வெளியீடு
மிக கனமழை பெய்ய இருக்கும் பகுதிகள் :
நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், மிக கனமழை பெய்யும்.