தமிழக போக்குவரத்து துறையில் 400 காலிப்பணியிடங்கள் – விரைவில் ஆட்கள் நியமனம்!
தமிழகத்தில் கடந்த 6 மாத காலமாக அரசுத்துறை பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இப்பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்:
தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன்மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் போட்டித் தேர்வுகள் நடைபெறாததால் ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளது. இதனால் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 2022ம் ஆண்டு 32 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்தது. அதன்படி கடந்த மே மாதம் குரூப் 2,2A தேர்வும் ஜூலை 24ம் தேதி குரூப் 4 & VAO தேர்வும் நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
தற்போது தேர்வின் முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பேசிய அத்துறையின் அதிகாரி தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டு இயல்பு நிலை திரும்பி உள்ளதால் அதிக அளவில் அதாவது கொரோனா காலகட்டத்திற்கு முன்பு உள்ளதை போல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் ஊழியர்கள் பலரும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் பேருந்துகளில் டிரைவர்-கண்டக்டர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.
தமிழக பள்ளிகளில் சுதந்திர தின விழா போட்டிகள் – முக்கிய தகவல் வெளியீடு
இதனை கருத்தில் கொண்டே இந்த பணி நியமன அறிவிப்புகள் வெளியிடப்படபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போதைய பற்றாக்குறை நிலையை சமாளிக்க ஒப்பந்த அடிப்படையில் கூடுதலாக 400 டிரைவர் – கண்டக்டர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் சாலை போக்குவரத்து இன்ஸ்டிடியூட் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.