தமிழக பள்ளிகளில் சுதந்திர தின விழா போட்டிகள் – முக்கிய தகவல் வெளியீடு!
இந்தியாவில் 75வது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், சுதந்திரத் திருநாள் அமுதடப் பெருவிழா வினாடி வினா போட்டிகள் குறித்த அறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
சுதந்திர தினவிழா:
இந்தியாவிற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது. இந்த நாளில் நமது தேச தலைவர்கள் பல தியாகங்களை செய்து சுதந்திரம் வாங்கி கொடுத்த நிலையில் அதை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டியது நமது கடமையாகும். அந்த வகையில் ஆண்டுதோறும் அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. மேலும் பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு சுதந்திர தினத்தை பற்றிய முக்கியத்துவம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் இந்த ஆண்டு 75வது சுதந்திர தினம் என்பதால் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 13, 14, 15-ம் தேதிகளில் அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், பேருந்துகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சுதந்திரத் திருநாள் அமுதடப் பெருவிழா வினாடி வினா போட்டிகள் சார்பான கடிதம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க
அதில் போட்டிகள் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்ற மாணவர்களின் விவரங்களை இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் முதன்மைக்கல்வி அலுவலரின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவ மாணவியர்கள் அந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Colli