தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தினால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் கனமழையும், தமிழ்நாட்டில் நிலவும் வெப்பநிலை குறித்தும் வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று மே 25 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தேனி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், தருமபுரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் – நிதித்துறை உத்தரவு!
இதை தொடர்ந்து நாளை மே 26 மற்றும் மே 27, 28, 29ந் தேதிகளிலும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் மே 26 அன்றைய தினத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.
Exams Daily Mobile App Download
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அந்நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யவும் வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.