மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் – நிதித்துறை உத்தரவு!
ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஓன்று வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பின் படி, அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கான உத்தரவை நிதித்துறை வெளியிட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்:
நாடு முழுவதும் 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. இருப்பினும் 2004 ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை ரத்து செய்ய 19 வருடங்களாக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். இதனால் சமீப காலமாக இந்த கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அண்மையில் ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் பங்களிப்பு ஓய்வூதிய விதி (2005) ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் ஏன் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது தெரியுமா? முழு விவரங்களுடன்!
இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை மாற்றி அம்மாநில நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு, பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கும் விதியை சட்டப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது. அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்துவதாக அறிவித்தார். அதன் பிறகு தேசிய பென்சன் திட்டத்துக்கான ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் ஏப்ரல் 1 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி மற்றும் அதற்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஓய்வு பெற்றவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பென்சன் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
Exams Daily Mobile App Download
அதன்படி 2022 மார்ச் 31க்கு முன் பணியில் இருந்து வெளியேறிய ஊழியர்களுக்கும் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த விதியின்படி ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படும். மேலும் 2004 ஏப்ரல் 1க்கு பிறகு ராஜஸ்தான் மாநில அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டனர். இப்போது ராஜஸ்தான் அரசு ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவிகித அடிப்படைப் பிடித்தத்தை நிறுத்தியுள்ளது. மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து சுமார் 39,000 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.