தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் நிலவும் வானிலை நிலவரத்தை பற்றி துல்லியமாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று முதல் 18ம் தேதி வரையிலான வானிலை நிலவரத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் நிலவும் வானிலை நிலவரத்தை பற்றி சென்னை வானிலை மையம் தகவல் தெரிவிப்பதால் பேரிடர் காலங்களில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில இடங்களிலும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மேலும் 18ம் தேதி வரையிலான வானிலை நிலவரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு – கசிந்த வினாத்தாள்! தீவிர விசாரணை!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
15.02.2022, 16.02.2022: தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
17.02.2022, 18.02.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26000 உயர்வு? வலுக்கும் கோரிக்கை!
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்துற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்ததிற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும்.