தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு – கசிந்த வினாத்தாள்! தீவிர விசாரணை!

0
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு - கசிந்த வினாத்தாள்! தீவிர விசாரணை!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு - கசிந்த வினாத்தாள்! தீவிர விசாரணை!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு – கசிந்த வினாத்தாள்! தீவிர விசாரணை!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தோ்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானது தொடர்பான விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

கசிந்த வினாத்தாள்:

தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த மாநில பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது. இந்த நேரத்தில் அடுத்த தாக்குதலாக கொரோனா மூன்றாம் அலை வேகமெடுக்க தொடங்கியது. அதனால் மீண்டும் ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அடிப்படை சம்பளம் உயர்வு!

இதன் விளைவாக கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. மேலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் தற்போது தொடங்கி உள்ளது. இதில் இன்று நடைபெறும் 12ம் வகுப்பு கணிதத்தேர்வு, 10ம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்து உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் இருந்து இந்த வினாத்தாள் வெளியானதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26000 உயர்வு? வலுக்கும் கோரிக்கை!

இது தொடர்பாக கல்வித்துறை சாா்பில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் பள்ளிக் கல்வித்துறை இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் வினாத்தாள் வெளியானது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறியுள்ளார். எனவே விசாரணைக்கு பிறகு வினாத்தாள் வெளியானதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற விவரம் தெரிய வரும். மேலும் வினாத்தாள் வெளியான பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!