மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26000 உயர்வு? வலுக்கும் கோரிக்கை!

0
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26000 உயர்வு? வலுக்கும் கோரிக்கை!
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26000 உயர்வு? வலுக்கும் கோரிக்கை!
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26000 உயர்வு? வலுக்கும் கோரிக்கை!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பல்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்யும் Fitment Factor யை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Fitment Factor உயர்வு:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பொருளாதார ரீதியில் அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் அரசு ஊழியர்களுக்கான 18 மாத காலத்திற்கான நிலுவை தொகையும் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அடிப்படை சம்பளம் உயர்வு!

அதன் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 31% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அகவிலைப்படி உயர்வு அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளத்தில் உயர்வும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டு தொடங்கிய நிலையில் இது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் அமைப்புகள் தங்களுக்கு வழங்கப்படும் Fitment Factor-ஐ உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சென்னை ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி பழைய அட்டவணையிலேயே இயக்கம்!

இந்த நிலையில் தற்போது வழங்கப்படும் 2.57 Fitment Factor அளவை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த Fitment Factor அளவை பொறுத்து ஊழியர்களின் சம்பளம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதனால் Fitment Factor இல் உயர்வு ஏற்பட்டால் ஊழியர்களின் சம்பளமும் உயரும். எனவே ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 18000 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான அகவிலைப்படி உயர்வு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!