தமிழக பள்ளிகளில் பொது காலாண்டு தேர்வு ரத்து – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வழக்கமாக ஒரே நாளில் காலாண்டு தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு பொது காலாண்டு தேர்வு கிடையாது என்ற புது மாற்றத்தை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொது காலாண்டு ரத்து:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் இந்த கல்வியாண்டில் வகுப்புகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் ஒரு சில மாதங்களில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் காலாண்டு, அரையாண்டு பரீட்சைகள் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு முழுமையாக வகுப்புகள் நடத்தப்படும் நிலையில் காலாண்டு அரையாண்டு தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஒரே நாளில் காலாண்டு தேர்வு நடைபெறும். ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி விடுமுறை தினங்களை கணக்கில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை காலாண்டு தேர்வு குறித்த தேதியை வெளியிடும். வழக்கமாக பொது காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் அனைத்து பள்ளிகளிலும் ஒரே நாளில் தேர்வு நடைபெறும். ஆனால் தற்போது 2022-23ஆம் கல்வியாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக “இந்த” ரயில்கள் ரத்து – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மேலும் இந்த ஆண்டு வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் செப் 30 ஆம் தேதிக்குள் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த ஆண்டு காலாண்டு தேர்வுகளுக்கு பின் வழக்கமாக விடப்படும் விடுமுறைகள் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்