தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக “இந்த” ரயில்கள் ரத்து – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக
தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக "இந்த" ரயில்கள் ரத்து - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக “இந்த” ரயில்கள் ரத்து – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள மக்கள் மத்தியில் ரயில் சேவைகள் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதேநேரத்தில் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்படுவது வழக்கம். அதன் படி நாளை (செப். 16) முதல் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரயில்கள் ரத்து:

தமிழகத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக ரயில் சேவைகள் இருக்கிறது. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரும் பயணம் செய்ய ரயில்கள் சிறந்ததாக இருக்கிறது. ரயில் கட்டணங்களும் குறைவாக இருப்பதாலும், மக்கள் அலுப்பு இல்லாமல் பயணம் செய்ய ரயில்கள் சிறந்த தேர்வாக இருக்கிறது. இந்நிலையில் ரயில்வே நிலையங்களுக்கு இடையே மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் மானாமதுரை-மேல கொன்னகுளம், திண்டுக்கல்-அம்பாத்துரை ராஜபாளையம்-சங்கரன்கோவில், சூடியூர்-பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ராமேஸ்வரம்- மதுரை பயணிகள் ரயில் நாளை (செப். 16) முதல் செப் 30 வரை ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக, மதியம் 1.30 மணிக்கு புறப்படும் எனவும் மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு பதில் மதியம் 1.10 மணிக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் திருச்சி-மானாமதுரை பயணிகள் ரயில் இரு மார்க்கங்கங்களிலும் வருகிற செப். 17 ஆம் தேதி முதல் செப் 22 ஆம் தேதிக்குள் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிவகங்கை-மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்-அம்பாத்துரை இடையே பராமரிப்பு பணி காரணமாக நாளை (செப். 16) முதல் செப் 30 வரை கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தொடர்ந்து சரியும் ஆபரணத்தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் ஹாப்பி!

மேலும் சென்னை-குருவாயூர் விரைவு ரயில் மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய், சனிக்கிழமைகளில் 70 நிமிடம் தாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும். இதனால் அந்த 3 நாட்களும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி பாசஞ்சர், இணைப்பு ரயிலாக செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஜபாளையம்-சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணி காரணமாக மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயில், செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் மதுரை பயணிகள் ரயில் ஆகியவை நாளை செப் 16 முதல் செப் 30 வரை முழுமையாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!