தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – வட்டார கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தல்!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - வட்டார கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - வட்டார கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – வட்டார கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

முன்னேற்பாடுகள்:

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்ப பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து உய ர்வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இதனால் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் தீவிர ஆலோசனைக்கு பின்னர் வரும் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின்வாரியத்தில் 5,336 பேருக்கு கேங்மேன் வேலைவாய்ப்பு – ஆணை வழங்க கோரிக்கை!

இதனால் உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள 93 துவக்கப் பள்ளிகள், 25 நடுநிலைப் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் தேவைக்கு ஏற்ப முகக்கவசம், சானிடைசர், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவை இருப்பில் வைக்க அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பான ஆய்வையும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக முதற்கட்டமாக ரூ.37,500 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு மேலாண்மை நிதியாக வழங்கப்பட்டுள்ள நிலையில், ‘சேப்டி அண்ட் செக்யூரிட்டி’ என்று ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – ஊதியத்துடன் கூடிய ஒரு வார விடுப்பு அறிவிப்பு!

மேலும் இந்த தொகையில் 4 ஆயிரம் ரூபாயை மட்டும் பயன்படுத்தி முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவை வாங்க தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வர இருக்கும் நிலையில், வகுப்பறைகள், தளவாடப்பொருட்குள், தலைமையாசிரியர் அறை, சமையலறை, கழிவறைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. முகக்கவசம் அணியாத மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என்று ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!