தமிழக மின்வாரியத்தில் 5,336 பேருக்கு கேங்மேன் வேலைவாய்ப்பு – ஆணை வழங்க கோரிக்கை!
தமிழக மின் வாரியத்தின் கேங்மேன் தேர்வில் விடுபட்டவர்களுக்கு உடனே பணி ஆணை வழங்க வேண்டும் என்று கோரி மின்வாரிய தலைமையகத்தை முற்றுகையிட்டு நேற்று (20.10.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கேங்மேன்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்றது முதல் மின்தடை குறித்து பல்வேறு புகார்கள் வந்த நிலையில் முந்தைய அரசு மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளததும், மின் வாரியத்தில் உள்ள ஆள் பற்றாக்குறையுமே மின் தடைக்கு காரணம் என்று தெரிவித்தது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக மின் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – ஊதியத்துடன் கூடிய ஒரு வார விடுப்பு அறிவிப்பு!
மின்வாரிய காலிப்பணியிடங்கள் குறித்து விவரங்களை சேகரிக்கும் பணிகளை மின் வாரியம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 14,949 பேரில் 9,613 பேருக்கு மட்டுமே பணி ஆணைகள் வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு பணி ஆணை வழங்க கோரி நேற்று மின்வாரிய தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மின் வாரியத்தில் கேங்மேன் பணி தான் முக்கியமான ஒன்று. இவர்கள் களப்பணியாளர்களாக இருந்து மின் தொடர்பான குறைகளை உடனே நிவர்த்தி செய்து வருகின்றனர்.
சொந்த வீடு கட்ட திட்டமிடுவோர் கவனத்திற்கு – பிரபல வங்கி வழங்கும் அதிரடி சலுகை!
இவர்களுக்கு உடனடியாக பணி ஆணையை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பணி ஆணை வழங்காத பாதி பேர் வயது வரம்பை மீறி விட்டனர். இவர்களால் இனி வரும் தேர்வில் கலந்து கொள்ள முடியாது. எனவே அரசு கேங்மேன் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்படாத 5336 பேருக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.