அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – ஊதியத்துடன் கூடிய ஒரு வார விடுப்பு அறிவிப்பு!
ரஷ்யாவில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக ஊதியத்துடன் ஒரு வாரத்திற்கு விடுமுறை அளித்து அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஊதியத்துடன் கூடிய விடுமுறை:
உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் உருவானது. அந்த கொடிய வைரஸ் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பாதித்தது. அதிலும் குறிப்பாக இத்தாலி மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் தற்போது கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனினும் ஒரு சில பகுதிகளில் இன்னும் பரவிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
UAN – ஆதார் கார்டினை இணைக்கும் எளிய வழிமுறைகள் | PF காப்பீடு பெற ‘இது’ கட்டாயம்!
மேலும் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 1,028 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே இதுதான் அதிக உயிரிழப்பு என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தற்போது கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் நாட்டில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வாரத்திற்கு சம்பளத்துடன் விடுமுறை அறிவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – சுகாதாரத்துறை செயலர்!
அதாவது அக்-30 ம் தேதி முதல் நவ-7 ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சுமார் 32 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர் என்பது வருத்தத்தை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். அதனால் இந்த விடுமுறையை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். இத்தகைய அறிவுறுத்தல்கள் அனைத்தும் மக்கள் நலன் கருதி மட்டுமே செய்யப்படுகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.