விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய வெண்பா இவர் தானா? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது புதிய திருப்பமாக நடிகை பரினா நடித்து வரும் வெண்பா கதாப்பாத்திரத்தில் அனிதா நடிக்க இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குளாக்கி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா
பல்வேறு வித்தியாசமான திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 2வது குழந்தையை காரணம் காட்டி கண்ணம்மாவை ஏமாற்றி வந்த வெண்பாவுக்கு கண்ணம்மா பதிலடி கொடுப்பது போல சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம் நகர இருக்கிறது. இதனுடன் கண்ணம்மாவை ஏமாற்றுவதற்காக வெண்பா செய்து வந்த தில்லு முல்லு அனைத்தும் வெளியாக இப்போது வெண்பாவை பயமுறுத்தி மிரட்டி வருகிறார் கண்ணம்மா.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” மூர்த்தி வீட்டில் ஸ்பெஷல் நிகழ்ச்சி – சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்கள்!
இப்படி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஒளிபரப்பப்படும் வெண்பா மற்றும் கண்ணம்மா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலுமே வெண்பா ஒரேயொரு உடையுடன் நடித்து வருகிறார். இதனை கடந்த சில எபிசோடுகளாக கவனித்து வந்த ரசிகர்கள், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை பரினா விலக இருப்பதாக கணித்துள்ளனர். அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரினா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
விவாகரத்திற்கு பிறகு சமந்தா எடுத்த அதிரடி நடவடிக்கை – YouTube சேனல்கள் மீது புகார்!
இருந்தாலும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இன்று வரையும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார் நடிகை பரினா. இப்போது பிரசவத்துக்காக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு பரினா சிறிது காலம் விலக இருப்பதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியான வண்ணம் இருந்து வருகிறது. மேலும் பரினாவுக்கு பதிலாக வெண்பா கதாப்பாத்திரத்தில் செய்தி வாசிப்பாளர் அனிதா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. என்றாலும் இது குறித்த உண்மை தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
Really very good you changed the venba ,very nice pavvam venba irthalum paravillaya yenna avga deliveryku poorga so neega rest eduga venba new character welcome pannurom.thank you vijay tv
அந்த வெண்பாவை திட்டினால் தான் மனசு ஆறும். புதிதாக யாரையோ கொண்டுவந்து அவர்களை கடைசி கட்ட காட்சியில் திட்டினால் இத்தனை நாள் பார்த்த பலனை இல்லை. கொடுமை செய்தது ஒருவர், பழி வாங்கப்படுவது இன்னொரு பெண்ணா