தமிழக பள்ளி மேலாண்மை குழு கூட்டம் குறித்த முக்கிய தகவல் – தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நாளை நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இக்கூட்டத்தை நடத்துவது குறித்த சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பியுள்ளது.
பள்ளி மேலாண்மை குழு
தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளி மேலாண்மை குழுவிலும் 20 உறுப்பினர்கள் இருப்பார்கள். இக்குழுவில் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் 15 பேரும், இக்குழு உறுப்பினர்களில் 50 சதவீதத்திற்கு மேல் பெண்கலும் இருக்க வேண்டும். மேலும் இக்குழுவானது பள்ளி வளர்ச்சியில் கவனம் செலுத்துதல், சமுதாயத்துக்கும் தொடர்பு ஊடகமாக இருத்தல் ஆகியவற்றிக்காக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இக்குழு நோக்கமாக கொண்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் வருகிற நவம்பர் 1ம் தேதி அன்று கிராம சபை கூட்டமானது நடைபெற இருக்கிறது. அதனால் நாளை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை அனைத்து பள்ளிகளும் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உள்ளாட்சி தினமான நவம்பர் 1ம் தேதி அன்று கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ துறையில் 4,308 காலியிடங்கள் – 2 மாதத்தில் நிரப்ப முடிவு, அமைச்சர் அதிரடி!
Follow our Instagram for more Latest Updates
இதே போல் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும். இதையடுத்து மாணவர்களின் உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காலாண்டு தேர்வில் மாணவர்களின் செயல்திறனை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.