தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் உயர்வு? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அரசு முடிவு செய்துள்ளது. அதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஓய்வு வயது உயர்வு
தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இதனை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு கையாண்டு வருகிறது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ஆக உள்ளது. இதனை 62 வயதாக உயர்த்த உள்ளதாக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு இளைஞர்கள் மத்தியில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் சட்டசபை தேர்தல் சமயத்தில் திமுக தனது வாக்குறுதியில், தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்திருந்தது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
ஆனால் இந்த திட்டத்தை அரசு நிறைவேற்றுவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் அரசு ஊழியர்கள் இதனை கண்டித்து போராட்ட களத்தில் இறங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன் காரணமாக அரசு ஊழியர்களை திருப்திப்படுத்த அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60யிலிருந்து 62 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானால் பல வருடங்களாக காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு மத்தியில் போராட்டம் வெடிக்கும் என்பதில் ஐயமில்லை.
Exams Daily Mobile App Download
மேலும் இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து ஒருவர் கூறியதாவது, தற்போது அரசு ஊழியர்கள் மாத சம்பளமாக ரூ.50,000 முதல் 2,00,000 லட்சம் ரூபாய் வரை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மேலும் 2 வருடம் ஓய்வு பெறும் வயதை உயர்த்தினால் அவர்களுக்கு மாத சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் புதிதாக ஒருவரை பணியில் நியமித்தால் அவர்களுக்கு முதலில் குறைவாக தான் மாத சம்பளம் வழங்கப்படும். இது அரசுக்கு நிதி நெருக்கடியை குறைப்பதாக இருக்கும். அத்துடன் கூடுதலாக காலிப்பணியிடங்களையும் நிரப்ப முடியும். அதனால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.