தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அதன் எதிரொலியாக , தேனி மாவட்டத்தில் லட்சுமிபுரம், கும்பக்கரை, பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் கத்திரி வெயில் நேற்று முன் தினத்துடன் நிறைவடைந்தாலும் சில நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தமிழகத்தில் மே 4ம் தேதி தொடங்கி 25 நாட்களுக்கு கத்திரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் நிகழும். ஆனால் சமீபகாலமாக கத்திரி வெயிலுக்கு முன்பே வெயில் அதிகமாக காணப்பட்டது. ஓரளவுக்கு மழை பெய்தாலும் மார்ச் 15ம் தேதிக்கு மேல் தான் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை 3 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கியுள்ளது.

Amazon, Google & Microsoft நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – சம்பள உயர்வு!

இதன்மூலம், தமிழ்நாட்டிற்கு இயல்பான மழை கிடைக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிக மழைப் பொழிவைத் தரும் தென்மேற்கு பருவமழை, ஜூன் 1ம் தேதி கேரளாவில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என தகவல்கள் கூறுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை நேற்று (மே 29) தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கினாலும், நடப்பாண்டில் மழைப்பொழிவு என்பது இயல்பான அளவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

கடந்த ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை, இயல்பை விட 17 சதவீதம் அதிகமாகவே பதிவானது. இந்நிலையில், நடப்பாண்டில் தமிழ்நாட்டில் இயல்பான மழையே பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருப்பினும் திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக, தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதையடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!