தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 மாதங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றைய வானிலை அறிக்கை தகவலின் படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இடைவிடாது தொடர்ந்து பெய்த கன மழையால் நீர் நிலைகள் நிரம்பி வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த ஆண்டு தமிழகத்தில் கோடை காலத்திலேயே நல்ல மழை பொழிவு காணப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 6 செ.மீ காஞ்சிபுரம் மாவட்டம் வேலப்பன்சாவடி, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூர் மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் புதிய வகை ஆன்லைன் மோசடி – பொது மக்களுக்கு டிஜிபி எச்சரிக்கை!
இந்த நிலையில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் செயல்படும் படி அறிவுறுத்தப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்