தமிழகத்தில் புதிய வகை ஆன்லைன் மோசடி – பொது மக்களுக்கு டிஜிபி எச்சரிக்கை!

0
தமிழகத்தில் புதிய வகை ஆன்லைன் மோசடி - பொது மக்களுக்கு டிஜிபி எச்சரிக்கை!
தமிழகத்தில் புதிய வகை ஆன்லைன் மோசடி - பொது மக்களுக்கு டிஜிபி எச்சரிக்கை!
தமிழகத்தில் புதிய வகை ஆன்லைன் மோசடி – பொது மக்களுக்கு டிஜிபி எச்சரிக்கை!

தமிழகத்தில் ஆன்லைனில் அவ்வப்போது மோசடிகளை நிகழ்த்துவது அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் தற்போது புதிய வகையில் ஆன்லைன் மோசடிகள் நடைபெறுவதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்லைன் மோசடி

தமிழகத்தில் அனைத்து பயன்பாடுகளும் ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது. ஆனால் தற்போது ஆன்லைன் முறையில் மோசடிகள் நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தினந்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உக்திகளை கையாளுகிறார்கள். இதனால் பொதுமக்கள் தங்களின் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர். அந்த வகையில் ஆன்லைனில் புதிய வகை மோசடி வந்துள்ளதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக டி.ஜி.பி சைலேந்திரபாபு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவில் இவர் தெரிவித்துள்ளதாவது, நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் மாவட்ட ஆட்சியர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் போன்று செல்போனில் பேசுவார்கள். அத்துடன் இவர்கள் ஆலோசனை கூட்டத்தில் இருப்பதாகவும் அமேசான் பரிசு கூப்பன் தேவைப்படுவதாகவும் கூறுவார்கள். மேலும் ஒரு கூப்பன் விலை 10000 ரூபாய் எனவும் 10 கூப்பன் தனக்கு தேவைப்படுவதாகவும் கூறுவார்கள். இதனை உடனே வாங்கி அனுப்ப வேண்டும். அதன் பிறகு தான் பணம் கொடுப்பதாகவும் கூறுவார்கள். உங்களுக்கு கூப்பன் வாங்க தெரியாது என்று கூறினாலும் விட மாட்டார்கள்.

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – 15,754 பேருக்கு தொற்று உறுதி!

இதனை வாங்குவதற்கான ஒரு லிங்கை அனுப்பி வைப்பார்கள். அதன்பின்பு 20 பரிசு கூப்பன் கூடுதலாக வேண்டும் என்று குறுந்தகவல் அனுப்பி வைப்பார்கள். இப்படி 50 கூப்பன் வரை உங்களை வாங்கி அனுப்பி வைக்கச் சொல்வார்கள். நீங்கள் வாங்கி அனுப்பிய பிறகு தான் நீங்கள் ஏமாந்து விட்டீர்கள் என்பதை உணர்வீர்கள். இது போன்ற மோசடி நடைபெற்றால் 100, 112 ஆகிய போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். அத்துடன் காவலன் உதவி செயலியில் ஆன்லைன் மோசடி என்பதை தொட்டால் போதும் 1930 என்ற எண்ணுக்கு தானாக அழைப்பு போய்விடும். இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது போன்ற மோசடியில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் ஏமாந்து விடாதீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!