தமிழக மருத்துவத்துறை காலிப்பணியிடங்கள் நவ.15ம் தேதிக்குள் நிரப்பல்? அமைச்சர் உறுதி!

0
தமிழக மருத்துவத்துறை காலிப்பணியிடங்கள் நவ.15ம் தேதிக்குள் நிரப்பல்? அமைச்சர் உறுதி!
தமிழக மருத்துவத்துறை காலிப்பணியிடங்கள் நவ.15ம் தேதிக்குள் நிரப்பல்? அமைச்சர் உறுதி!
தமிழக மருத்துவத்துறை காலிப்பணியிடங்கள் நவ.15ம் தேதிக்குள் நிரப்பல்? அமைச்சர் உறுதி!

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது மருத்துவத்துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.

காலிப்பணியிடங்கள்

தமிழகத்தில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 75 லட்சம் மதிப்பிலான முதியோர் பிரிவு கட்டிடம், ரூ. 30 லட்சம் மதிப்பிலான சித்த மருத்துவப் பிரிவு கட்டிடம், ரூ. 48 லட்சம் மதிப்பிலான புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டிடங்களை தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து மருத்துவ பணியிடத்தில் பணியிடங்கள் குறித்து அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

TNPSC Group 1 தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முழு பாடத்திட்டம் இதோ!

இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் கண்டறியப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் நிரப்பப்படும் என்று உறுதியளித்துள்ளார். அதன்படி புதிதாக 4,038 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார். இதுவரை புதிதாக நிரப்பப்பட்ட 7,448 செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனா காலத்தில் பணியில் நியமிக்கப்பட்டவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

மேலும் தமிழக அரசு மருத்துவமனைகளில் இதுவரை பணியாளர்கள் பற்றாக்குறைவின்றி செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ கடைகளில் தற்கொலைகளுக்கு உபயோகப்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தற்கொலை பயன்படுத்தப்படும் பொருட்களை வெளியில் தெரியும் விதமாக வைக்க கூடாது. தனி நபராக வந்து கேட்பவர்களுக்கு தற்கொலைக்கு ஆதாரமான பொருட்களான சாணி பவுடர் மற்றும் எலி பேஸ்ட் தரக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!