கல்வியில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் முன்னிலை – ஐகோர்ட் விளக்கம்!
நடப்பு கல்வி ஆண்டில் 6 – 19 வயதுடைய இடைநின்ற மாணவர்கள் குறித்ததான கணக்கெடுப்பை நடத்த கோரி மதுரையை சேர்ந்த முத்துச்செல்வம் தாக்கல் செய்த மனுவிற்கு நீதிபதி தரப்பில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஐகோர்ட் உத்தரவு :
தமிழகத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் குடும்பச் சூழல் உள்ளிட்ட காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்திவிடும் நிலை நிலவுகிறது. அதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஆண்டுதோறும் இடைநின்ற மாணவர்கள் குறித்த தகவல்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2019 மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் கொரோனா பரவல் காரணத்தால் மூடப்பட்டன. ஆனாலும், மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டன.
Exams Daily Mobile App Download
அதேநேரம், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, இடம்பெயர்தல் போன்ற காரணங்களாலும் ஏராளமான குழந்தைகள் தங்கள் கல்வியை பாதியிலேயே கைவிட்டனர். இவ்வாறு கல்வி இடைநிற்றல் என்பது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் குறைவாக உள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 6 – 19 வயதுடைய இடைநின்ற மாணவர்கள் குறித்ததான கணக்கெடுப்பை நடத்த கோரி மதுரையை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை – கனமழை எதிரொலி
அந்த மனு மீதான விசாரணையின் முடிவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது என நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. அதன் காரணம் அரசின் பல நலத் திட்டங்கள் தான் என்பதையும் தெளிவாக முன்வைத்துள்ளார். மேலும், தமிழ்நாட்டைப் போல் கேரளாவும் கல்வி அறிவில் சிறந்து விளங்குவதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இறுதியாக குழந்தைகள் பள்ளியில் இடைநிற்றல் செய்வது என்பது அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று. எனவே அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டு ஐகோர்ட் மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்தது.
ஆசிரியர்கள் இடைநிற்றல் அதிகரித்துக் கொண்டே போகிறது