பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை – கனமழை எதிரொலி!

0
பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை - கனமழை எதிரொலி!
பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை - கனமழை எதிரொலி!
பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை – கனமழை எதிரொலி!

மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருவதால் இன்று (ஜூலை 30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை வெள்ளத்தால் சாலைகள் பலவற்றில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

கனமழை எதிரொலி:

தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ஆம் தேதி அன்று தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கடந்த மே 29-ஆம் தேதி அன்றே கேரளாவில் பருவமழை தொடங்கி விட்டது. நாட்டில் பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய தென் மேற்கு பருவ மழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) சராசரி மழை பொழிவு 106 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த மாதம் பருவ மழை பொழிவு 99 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கூடுதல் பருவ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்யும் என தகவல்கள் கூறுகின்றன. இதை தொடர்ந்து தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மழை பெய்கிறது. கோடை காலமான ஜூன், ஜூலை மாதத்தில் மழை பெய்து பூமியை குளிர்வித்து வருவதால் பொதுமக்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தட்சிண கன்னடா துணை ஆணையர் (டிசி) டாக்டர் கேவி ராஜேந்திரா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

அதில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, மங்களூரு சப்-டிவிஷன் (மங்களூரு சிட்டி கார்ப்பரேஷன், முல்கி, மூடபித்ரி,உல்லல் மற்றும் பண்ட்வால் தாலுகா) முழுவதும் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை என தட்சிண கன்னடா துணை ஆணையர் கே.வி.ராஜேந்திரா தெரிவித்துள்ளார். மேலும் மழை வெள்ளத்தால் சாலைகள் பலவற்றில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மங்களூரு மாநகராட்சி எல்லையில் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புத்தூரில் மழை நிலவரம் குறித்து தாசில்தார் மற்றும் பிஇஓக்கள் உரிய முடிவு எடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!