தமிழகத்தில் 19ம் தேதி வரை வாட்டி வதக்க போகும் வெயில் – வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், தற்போது வருகிற ஏப்ரல் 19ம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வெப்பநிலை
தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதே போன்று தமிழகத்திலும் மற்றும் புதுச்சேரியிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்தப்படியே உள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்வு – போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
அத்துடன் கோயம்புத்தூர், சென்னை, தர்மபுரி, நீலகிரி, மதுரை, கன்னியாகுமரி, சேலம், திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையை விட 1.6 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகியுள்ளது. மேலும் இதில் குறிப்பாக ஈரோட்டில் 40.8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, ஏப்ரல் 16 முதல் 19ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் இயல்பு வெப்பநிலையை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.