அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்வு – போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

0
 அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்வு - போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
 அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்வு - போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்வு – போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

பிரான்ஸ் நாட்டில் ஓய்வூதிய சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பொதுமக்கள் தற்போது போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.

ஓய்வு பெறும் வயது உயர்வு

பிரான்ஸ் நாட்டில் புதிதாக ஓய்வூதிய சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.  அதன்படி இந்த ஆண்டு முதல் ஓய்வு பெறும் வயது 62 லிருந்து 64 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  இதற்கு தற்போது நீதிமன்றமும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.  இந்த அறிவிப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினர் தற்போது போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.

மேலும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் இந்த அறிவிப்பால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.  தற்போது இதில் 110 போராட்டக்காரர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஓய்வூதிய சட்ட மசோதாவை அரசு நிறைவேற்றியது. இதனை பிரெஞ்சு மாகாண நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!