தமிழக அரசின் உயர்த்தப்பட்ட சொத்து வரி செல்லும் – உயர்நீதி மன்றம் உத்தரவு!
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு வெளியிட்ட உத்தரவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சொத்து வரி உயர்வு:
தமிழக அரசிற்கு மக்கள் செலுத்தும் வரிகளின் மூலம் தான் வருமானம் கிடைக்கிறது. இதனால் மக்கள் அரசு விதிக்கும் சம்பந்தப்பட்ட வரிகளை முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் செலுத்த வேண்டும். இதனை தவறும் பட்சத்தில் வரியுடன் சேர்த்து அபராதமும் விதிக்கப்படும். இந்நிலையில், தமிழகத்தில் அரசின் வருவாயை அதிகரிக்க திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, மக்கள் செலுத்தும் சொத்து வரி உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் இல்லை – அமைச்சர் தகவல்!!
Exams Daily Mobile App Download
இதன்மூலம் அரசின் வருவாய் பற்றாக்குறை ஈடுசெய்ய திட்டமிடப்பட்டது. இதனால் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதற்கான தீர்மானங்களை மாநகராட்சிகள் வெளியிட்டது. ஆனால் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தமிழக அரசின் சொத்து வரி உயர்வு அரசாணையும், மாநகராட்சியின் தீர்மானங்களும் செல்லுபடியாகும் என்று உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.