தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் இல்லை – அமைச்சர் தகவல்!!
உலக நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுயகட்டுப்பாடு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுய கட்டுப்பாடு:
கடந்த 2020ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு தடுப்பு பணிகளுக்கு பிறகு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தொற்றிலிருந்து நாம் மீண்டு விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் வேகமெடுக்க தொடங்கி விட்டது. தற்போது நாளொன்றுக்கு சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனையடுத்து இந்தியாவில் மக்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. மக்கள் தொற்று பரவுவதை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிதல் கிருமி நாசினிகளை பயன்படுத்துதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.
டிச.31 முதல் வாட்ஸ் அப் செயலி செயல்படாதா? – அதிர்ச்சி தகவல்! பயனர்கள் கவனத்திற்கு!
Exams Daily Mobile App Download
இது குறித்து பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தமிழகத்தை பொறுத்தவரை புத்தாண்டு விழா கொண்டாட்டம், சமய விழாக்கள் அரசியல் கட்சி நிகழ்வுகள் போன்றவற்றிக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இதுவரை விதிக்கப்படவில்லை. இருந்தாலும் மக்கள் சுயகட்டுப்பாடுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.