தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் – வெறிச்சோடிய அலுவலகங்களால் சிரமத்தில் மக்கள்..!
தமிழகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நேற்று (மார்ச் 23) தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஊழியர்கள் வேலை நிறுத்தம்
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் அனைவரும் நேற்று (மார்ச் 23) ஒரே நாளில் விடுமுறை எடுத்துக் கொண்டு போராட்டம் நடத்தியது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநில அளவில் ஒரு நாள் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தி இருக்கின்றனர். இந்த போராட்டத்தில் நான்கு ஆண்டுகளாக வெளியிடாமல் இருக்கும் துணை ஆட்சியர் பட்டியலை உடனே வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது கொடுக்கப்பட்ட கோரிக்கைகள் மீது சரியான நடவடிக்கை எடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினார்கள்.
Follow our Instagram for more Latest Updates
இந்த போராட்டம் மாநில அளவில் நடைபெற்று இருந்தாலும் ஈரோடு மாவட்டத்தில் பவானி,ஈரோடு, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, மொடக்குறிச்சிம் பெருந்துறை, நம்பியூர், கொடுமுடி ஆகிய தாலுகா அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்கள் வேலைக்கு வராததால் வெறிசோடி காணப்பட்டன. இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் 445 வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டதாகவும், தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது
Exams Daily Mobile App Download