தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் விபரங்களை சேகரிக்க புதிய குழு – அன்பில் மகேஷ் விளக்கம்!

0
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் விபரங்களை சேகரிக்க புதிய குழு - அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் விபரங்களை சேகரிக்க புதிய குழு - அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் விபரங்களை சேகரிக்க புதிய குழு – அன்பில் மகேஷ் விளக்கம்!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்விற்கு வருகை புரியாதவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை துணை தேர்வு எழுத வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் மொழிப்பாடத் தேர்வு மற்றும் முக்கிய பாடத்தேர்வுகளை சுமார் 50,000 மாணவர்கள் வரை எழுதவில்லை. இது தொடர்பாக சட்டபேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளதாவது, பொதுத்தேர்வை ஏன் இத்தனை மாணவர்கள் எழுதாமல் உள்ளனர் என்று தமிழக முதல்வர் தொலைபேசி மூலமாக கேட்டறிந்தார்.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – அதிகரிக்கும் விமான கட்டணம்! ஷாக் அப்டேட்!

மேலும் வருங்காலத்தில் இது போன்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதாத நிலை ஏற்படாக்கூடாது என்று அறிவுறுத்தியதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அமைச்சர், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு எழுத பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

இதுமட்டுமில்லாமல் இந்த மாணவர்களில், வேலைக்கு செல்லும் மாணவர்களை கண்டறிந்து துணைத்தேர்வு எழுத வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார். பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்களை சேகரிப்பதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!