தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்ட வழக்கு – உயர்நீதிமன்ற கிளை புதிய உத்தரவு!
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
காலை உணவு திட்டம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துவக்கப்பள்ளிகளிலும் 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கும் அரசின் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த மனுவில் கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மீனவ குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக மோசமான நிலையில் உள்ளனர்.
சென்னையில் நாளை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி – போக்குவரத்தில் முக்கிய மாற்றம்!
கடலோரப் பகுதிகளில் அதிக அளவு அரசு உதவி பெறும் பள்ளிகள் தான் உள்ளது. பல மீனவ குடும்பங்களின் குழந்தைகள் ஏழ்மையால் படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளனர். எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டால் மீனவ குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மிகுந்த பயனடைவார்கள். எனவே தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி , கன்னியாகுமரி ஆகிய கடலோரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Follow our Twitter Page for More Latest News Updates
வழக்கின் விசாரணையில் அரசு பிளீடர் திலக்குமார் அவர்கள் ஆஜராகி அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தான் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடையது. இதனால் அரசு பள்ளிகளில் மட்டும் தான் செயல்படுத்தப்படும். கிராமம், ஒன்றியம், நகரம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள துவக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் பயன்பாட்டில் உள்ளது என்று கூறினார். இதன் பிறகு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இது தொடர்பாக அரசிடம் உரிய விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.