சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் அட்சய திருதியை தொடர்ந்து தற்போது ஆபரணத் தங்க விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் வரும் காலங்களிலும் சுயகாரியங்களுக்கு கூட தங்க நகை வாங்க முடியாத நெருக்கடியான சூழ்நிலை உருவாகலாம். அந்த வகையில் இன்றும் தங்கவிலை உயர்ந்து உள்ளது. இது நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தங்கத்தின் விலை உயர்வு:
தங்க நகை அணிவதை ஆடம்பரமாகவும், கௌரவமாகவும் கருதுவதால் அதன் விலை எவ்வளவு ஏறினாலும் நகைகளின் விற்பனை மட்டும் குறைவது இல்லை. சர்வதேச பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்ற – இறக்கம் காணப்படுகிறது. ரஷ்யா- உக்ரைன் இடையே போர் காரணமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பி உள்ளது. இதனால் பங்குச்சந்தையில் வீழ்ச்சி நிலவுகிறது. இதன் காரணமாக தங்கம் விலை மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு மீண்டும் DA, DR உயர்வு – 7வது ஊதியக்குழு அறிக்கை!
தங்கம் விலையை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நடுத்தர மக்கள் சிறுக, சிறுக சேமித்து தங்கம் வாங்கும் நிலை உள்ளது. தற்போது தங்கம் மேலும் விலையேறினால், நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனி போன்று ஆகிவிடும். சென்னையில் கடந்த 13ம் தேதி ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.544 சரிந்தது. தொடர்ந்து 14ம் தேதி ரூ.144 குறைந்து, சவரன் ரூ.37,896க்கு விற்கப்பட்டது. இருப்பினும் நேற்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் சற்று குறைந்து, சவரனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.37,824-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.37,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.4,747-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் குறைந்து, ரூ.65.10க்கு விற்பனை ஆகிறது.