ரூ.20,500/- ஊதியத்தில் எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – இன்றே விண்ணப்பிக்கவும்..!
கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் DEIC-Optometrist, SNCU-Hospital Worker பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் (20.05.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி , வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
DHS வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS) DEIC-Optometrist, SNCU-Hospital Worker, Refrigeration Mechanic பணிக்கு தலா ஒரு பணியிடங்கள் வீதம் மொத்தமாக 03 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் DEIC-Optometrist பணிக்கு Optometry பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், SNCU-Hospital Worker பணிக்கு 8 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், Refrigeration Mechanic பணிக்கு Mechanic in Refrigeration & Air Conditioning பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 ஆண்டு முன் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது எனவும் அதிகபட்சம் 35 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. DEIC-Optometrist பணிக்கு ரூ.9,500/- மாத சம்பளமாகவும், SNCU-Hospital Worker பணிக்கு ரூ.8,500/- மாத சம்பளமாகவும், Refrigeration Mechanic பணிக்கு ரூ.20,500/- மாத சம்பளமாகவும் வழங்கப்படும். இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் நேரடியாக Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Join Our TNPSC Coaching Center
இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது விரைவு தபால் செய்யலாம். நாளை (20.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் என்பதால் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.