சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம்!
சென்னையில் தொடர்ச்சியாக சரிவை கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்றைய (செப்டம்பர் 21) விற்பனையில் சற்று ஏற்றம் கண்டுள்ளது. அந்த வகையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.112 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய விற்பனை
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாராத விதமாக வீழ்ச்சியடைந்து வந்தது. அதிலும் குறிப்பாக சுபமுகூர்த்த தினங்கள், பண்டிகை காலங்களிலும் ஆபரணத் தங்கத்தின் விலையானது மிக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தங்கத்தின் விலை குறைவால், இந்த 2 வாரங்களில் ஆபரணத் தங்கத்தின் விற்பனை படு ஜோராக நடந்து வந்தது.
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாட உள்ள போட்டிகள் – BCCI அட்டவணை வெளியீடு!
இந்த எதிர்பாராத விலை குறைவால் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியுடன் தங்கநகைகளை வாங்கி சென்றனர். தொடர்ந்து காணப்பட்டு வந்த அதிரடி வீழ்ச்சி காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.35,000 வரை குறைந்துள்ளது. அதாவது 2 வாரங்களில் சுமார் 2 ஆயிரம் ரூபாய் வரை தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
சென்னையில் குடிநீர் வரி, கட்டணங்களை செலுத்த செப்.30 வரை கால அவகாசம் – வாரியம் அறிவிப்பு!
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 21) காலை துவங்கியுள்ள தங்கத்தின் விற்பனையில், சவரனுக்கு ரூ.112 வரை விலை அதிரடி உயர்வை கண்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 வரை உயர்ந்து ரூ.34,992க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் ஒரு கிராமுக்கு ரூ.14 என உயர்ந்து ரூ.4,374க்கு விற்பனையாகிறது. இதனுடன் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.