சென்னையில் குடிநீர் வரி, கட்டணங்களை செலுத்த செப்.30 வரை கால அவகாசம் – வாரியம் அறிவிப்பு!
சென்னை மாநகரத்தில் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் வரி செலுத்துபவர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்தின் படி செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் தங்களது கட்டணங்களை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி கட்டணம்
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று சூழலினால் பலரும் வேலையின்மை, நிதி பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் சிறு நகரங்கள் துவங்கி பெரிய நகரங்களில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிதி சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வசித்து வரும் மக்கள் வாடகை துவக்கி குடிநீர் கட்டணத்தை கூட செலுத்தமுடியாமல் திணறி வருகின்றனர்.
செப்.25 வரை பள்ளிகளை மூட உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!
பொது மக்கள் சந்தித்து வரும் இந்த இக்கட்டான கால கட்டத்தில் மின்சாரம், நீர் போன்றவற்றிற்கு வரி செலுத்தும் நபர்களுக்கு அரசு சில காலம் அவகாசம் வழங்கி, அவற்றை நீட்டித்தும் தருகிறது. அந்த வகையில் சென்னை மாநகரில் குடிநீா் வரி உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தும் நபர்களுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்படுவதாக சென்னை குடிநீா் வாரியம் அறிவித்துள்ளது.
TNPSC குரூப் 2, 2A & குரூப் 4 VAO தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – செப்.22 ஆலோசனை கூட்டம்!
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் வரி செலுத்துபவர்கள், நுகா்வோா்கள் தங்களது கட்டணத்தை வரும் 30 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இந்த வரியை, சென்னைக் குடிநீா் வாரியத்தின் தலைமை அலுவலகம், பகுதி அலுவலகங்கள், பணிமனை வசூல் மையங்கள், அரசு இ-சேவை மையங்கள் மற்றும் இணையதளம் மூலமாகவும் செலுத்திக் கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.