தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் – கல்வித்துறை திடீர் விளக்கம்!
தமிழகத்தில் நாளை ஜூன் 13 ல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக கல்வித்துறை அமைச்சர் தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்த எச்சரிக்கையை குறித்தும், பள்ளி நேர மாற்றம் குறித்தும் செய்திவாசிப்பாளர்களிடம் பேசியுள்ளார்.
கல்வித்துறை அமைச்சர்:
கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணத்தால் நாட்டில் பல மாற்றங்கள் அமைந்ததில் கல்வியும் ஒன்று. அதாவது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வாயிலாகத்தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் பள்ளி திறப்பு தேதி முடிவு செய்வதில் குழப்பம் நீடித்தது. இந்த ஆண்டு 2022ல் கொரோனா தாக்கம் குறைந்ததால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி தேர்வுகளும் முடிவடைந்து கடந்த ஒரு மாதமாக பள்ளி கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டு தற்போது பள்ளி திறப்பு தேதியும் நெருங்கிவிட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – வலுக்கும் கோரிக்கை!
இவ்வாறு கல்வித்துறை அமைச்சர் முன்னதாக சொன்ன படி நாளை திங்கட்கிழமை (ஜூன் 13) பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பள்ளி வளாகங்களை தூய்மை செய்வது, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே அதிகாரிகள் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அத்துடன் கடந்த இரு நாட்களாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் பள்ளிகள் திறப்பு குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பராமரிப்பு கட்டணம் என்கிற பெயரில் எந்த தொகையும் தனியார் பள்ளிகள் வசூலிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். இதை மீறி ஏதேனும் கட்டணம் அநாவசியமாக வசூலிப்பதாக புகார் வந்தால் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாநிலம் முழுவதும் பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைப்பது பற்றி தமிழக முதல்வரிடம் கலந்தாலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.