தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை - அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்று பொது விடுமுறை என தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

பொது விடுமுறை:

நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு பதிவு நடைபெறும் நாள் அன்று பொது விடுமுறை வழங்க வேண்டும் என ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி ராஜஸ்தான், கேரளா போன்ற மாநிலங்களில் பொது தேர்தல் நடைபெறும் நாள் அன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இனி டிக்டாக் போன்று லிங்க்ட்-இன் தளத்திலும் வீடியோ – புதிய வசதி அறிமுகம்!

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பொது விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் ஜனநாயக கடமையை ஆற்ற பொது விடுமுறை விடப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாள் அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!