தமிழக மாற்று திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
சென்னை பல்கலைக்கழகம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 1500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம் :
தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. மேலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அரசுத்துறையை தொடர்ந்து தனியார் துறை நிறுவனங்களும் வேலை வாய்ப்புகளை வழங்க முன் வந்துள்ளனர். கடந்த வருடங்களில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் ஊரடங்கால் பொருளாதாரம் இழந்து சிரமப்பட்டு வந்தனர். அத்தகைய நேரத்தில் மீண்டும் வேலைவாய்ப்புகளை தேடி வந்தனர். இவர்களுக்கு உதவும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பணிகள் வழங்கப்பட்டது.
மாநிலத்தில் நாளை ஆரஞ்ச் அலர்ட் – பதற்றத்தில் பொதுமக்கள்!
இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித்தகுதி பெற்றவர்கள் வரை வேலைகளை பெற்றனர். அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் சென்னை பல்கலைக்கழகம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இந்தியாவில் உள்ள 40 முன்னனி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்புகளை பெற்றனர். மேலும் 15000 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்புகளை பெற்றனர். சென்னை பல்கலையில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.
பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பொருளாதார ரீதியாக மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தொற்று அச்சத்தால் வெளியின் சென்று அலைந்துவேளை தேட இயலாத நிலையில் உள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழலில் ஓரே இடத்தில் எங்களை அழைத்து வேலைவாய்ப்பு வழங்கிய தமிழக அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினரும் ராயபுரம் எம்எல்ஏவுமான ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.