மாநிலத்தில் நாளை ஆரஞ்ச் அலர்ட் – பதற்றத்தில் பொதுமக்கள்!

0
மாநிலத்தில் நாளை ஆரஞ்ச் அலர்ட் - பதற்றத்தில் பொதுமக்கள்!
மாநிலத்தில் நாளை ஆரஞ்ச் அலர்ட் - பதற்றத்தில் பொதுமக்கள்!
மாநிலத்தில் நாளை ஆரஞ்ச் அலர்ட் – பதற்றத்தில் பொதுமக்கள்!

கோடை காலம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து வெப்ப சலனம் காரணமாக நாடு முழுவதும் கனமழை கடந்த சில நாட்களாக பல மாநிலங்களில் பெய்து வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நாளை கனமழை தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஆரஞ்ச் அலர்ட்:

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் லேசான மழையும் அவ்வவ்போது கனமழையும் பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டில் கோடை காலம், முன்னதாக துவங்கியதால் வெயில் வாட்டி வதைத்தது. இருப்பினும் அசானி புயல் மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழையும் தான் பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.

TNPSC குரூப் & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

இந்த நிலையில் தெற்கு ஆந்திரா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ஜூன் 20ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மும்பையில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் நாளை கனமழை தொடர்பான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் உள்ளிட்ட இடங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!