தமிழக 10, 11, மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன் எடுத்துவர தேர்வுகள் இயக்ககம் தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செல்போனுக்கு தடை:
தமிழகத்தில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. இந்த ஆன்லைன் கல்வி ஸ்மார்ட்போன் வைத்துள்ள மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றதாக இருந்தது. மற்ற அரசு பள்ளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி எட்டாக் கனியாகவே இருந்த நிலையில் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு கல்வி தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவே நடத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் அரசின் முயற்சியால் கொரோனா பாதிப்புகள் குறைந்தது. கடந்த 2021 செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் தேர்வு தொடங்கவுள்ளது. மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை கிடைப்பதில் சிக்கல்? முழு விவரம் இதோ!
இந்த நிலையில் பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன் எடுத்துவர அரசு தேர்வுகள் இயக்ககம் தடை விதித்துள்ளது. தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன்/ இதர தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10, 11 & 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.