மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை கிடைப்பதில் சிக்கல்? முழு விவரம் இதோ!
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகையை வழங்குவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
DA நிலுவைத்தொகை:
கடந்த மாதம், மத்திய அமைச்சரவை 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (DA) 3% ஆக உயர்த்தி அறிவித்தது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மொத்த DA தொகை 34% ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிலுவையில் இருக்கும் டிஏ பாக்கிகள் தற்போது வழங்கப்படாது என மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, கொரோனா தொற்றுநோயால் உருவான நிதி நெருக்கடிக்கு மத்தியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த DA தொகை 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த தொகை இப்போது வழங்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த ஒரு ஊடக அறிக்கையின்படி, மத்திய ஓய்வூதியர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமையில் ஓய்வூதிய விதிகளை மறு ஆய்வு செய்வதற்கு நடைபெற்ற தன்னார்வ நிறுவனங்களின் நிலைக்குழுவின் 32வது கூட்டத்தில், முடக்கப்பட்டிருந்த DA தொகை மீட்டெடுக்கப்படாது என்று செலவினத் துறையின் (DoE) பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல்கள் இன்னும் அரசால் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மீண்டும் 4 ஆம் அலை துவக்கம் – எச்சரிக்கும் அரசு மருத்துவர்கள்! அச்சத்தில் மக்கள்!
இதற்கிடையில் கடந்த மாதம், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை வருமானத்தில் 34% DA தொகையை அளிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த முடிவின் மூலம் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வு பெற்றவர்களும் பயனடைய உள்ளனர். இதற்கு முன்னதாக ஜூலை 2021ல், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகையை 28 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. தொடர்ந்து அக்டோபரில் மீண்டும் 3% DA அதிகரித்து பின்னர் 31% ஆக உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் வெளியான அறிவிப்பின் படி, ஜனவரி 2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் 34 சதவீத DA அதிகரிப்பின் பலனை பெற உள்ளனர்.