ரூ.1,500 ஊக்கத்தொகை அளிக்கும் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு – 1500 மாணவர்களுக்கு ஜாக்பாட்!
தமிழக மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதற்காக நடத்தப்பட்ட தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
ஊக்கத்தொகை:
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி, அரசு, தனியார், அரசு உதவி பெறும், சிபிஎஸ்இ போன்ற அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்வில் மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2,50,731 மாணவர்கள் அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் கலந்து கொண்டனர்.
மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு – Whatsapp மூலம் டிக்கெட் எடுக்கலாம்!!
Exams Daily Mobile App Download
நேற்று அரசுத் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்வின் முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் வெளியிடப்பட்டது. அதன்படி, தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகையாக 2 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தேர்வில் 410 தனியார் பள்ளி மாணவர்கள், 123 அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள், 967 அரசுப் பள்ளி மாணவர்கள் என 1500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு அறிவித்த படி, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் மாதம் தோறும் ஊக்கத்தொகை அளிக்கப்படும்.