மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு – Whatsapp மூலம் டிக்கெட் எடுக்கலாம்!!
மெட்ரோ ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பயணிகள் வீட்டில் இருந்தபடியே டிக்கெட் பெறும் வகையில் புதிய அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயில்
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தவிர்ப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் அலுவலகம், வீடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயணிகள் தங்களின் டிக்கெட்டுகளை விரைவாக பெறும் வகையில் பயண அட்டை முறை, க்யூ ஆர் குறியீடு முறை உள்ளிட்ட டிஜிட்டல் முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதையடுத்து தற்போது பயணிகள் வீட்டில் இருந்தபடி டிக்கெட் எடுக்கும் வகையில் Whatsapp மூலம் டிக்கெட் பெறுவதற்கான புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் கூறியிருப்பதாவது, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு “Hai” என்று பயணிகள் குறுந்தகவல் அனுப்பினால் `சாட் போட்’ என்ற தகவல் கிடைக்கும்.
தமிழகத்தில் உள்ள வீடுகளில் இனி இது கட்டாயம் – மின்சார வாரியம் புதிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
இதில் பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம்,சேரும் ரயில் நிலையம் உள்ளிட்ட விவரங்களை பதிவுசெய்து அதற்குரிய டிக்கெட் கட்டணத்தை வாட்ஸ்-அப் மூலமோ அல்லது மற்ற டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி பணம் செலுத்த வேண்டும். இப்போது உங்களுக்கான டிக்கெட் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பப்படும். அதன்பின்பு மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில் உள்ள QR Code Scanner-ல் காண்பித்து ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை விரைவில் செயல்படுத்த இருப்பதாகவும் கூறியுள்ளார்.