தமிழக மருத்துவ பணியாளர் தேர்வுகளிலும் ‘தமிழ் மொழித்தேர்வு’ கட்டாயம் – அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் அரசு பணியில் சேர்க்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் பெறப்பட்ட நிலையில் இதனை தடுக்கும் விதமாக அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது இந்த தேர்விலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழித்தேர்வு
தமிழக அரசு பணிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை விட வெளிமாநிலத்தவர்கள் தான் அதிகம் பணிபுரிந்து வருவதாக புகார்கள் எழுந்தது. அதனால் இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் அனைத்து போட்டித்தேர்வுகளில் தமிழ்மொழித் தகுதித்தாள் கட்டாயமாக்கப்பட்டது. மேலும் இத்தேர்வில் நீங்கள் குறைந்தபட்சமாக 40 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி நடப்பு ஆண்டில் நடைபெற்ற குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு நடைபெற்றது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதனால் தேர்வர்கள் கட்டாயமான முறையில் தமிழ் மொழியை படித்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதையடுத்து தற்போது தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, என்எல்சி, துறைமுகம், விமான நிலையங்கள், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெரும்பாலும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியில் இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மருத்துவ பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
Facebook, Insta-வை தொடர்ந்து வாட்ஸ் அப்பில் வரவுள்ள புது அம்சம் – இனி Profile Picture கவலை இல்லை!
அதன்படி தற்போது மருத்துவ பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயம் ஆனது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அரசாணையில் தமிழ் மொழித்தாளுக்குரிய பாடத்திட்டமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் மொழித்தேர்வு 50 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம் நடத்தப்படும் எனவும் இத்தேர்வில் குறைந்தபட்சமாக 40% மதிப்பெண்கள் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.