TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்த முழு விபரம்!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் குறித்த முழு விபரம்!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் குறித்த முழு விபரம்!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்த முழு விபரம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளின் நடைமுறை, பாடத்திட்டம் மற்றும் தேர்வர்களுக்கான முக்கிய தகவல்கள் குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.

TNPSC குரூப் 4:

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சென்ற ஆண்டு இறுதியில் குறைந்த நிலையில் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டு முழுமூச்சில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த ஒரு தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் உள்ள படித்த பட்டதாரிகள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த TNPSC Group 2 தேர்வு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அடுத்தாக குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் மார்ச் 31ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!

மேலும் TNPSC குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்கான பதவிகள், தற்போது இந்த தேர்வுகள் பின்வரும் 7 விதமான பதவிகளுக்காக நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மேலும் அதன் கல்வித் தகுதிகளாக, குரூப் 4 தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி என்பது தான் அடிப்படை கல்வித் தகுதி. இருப்பினும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அடுத்தாக, குரூப் 4 தேர்வுக்கான வயது பொதுவாக 18 முதல் 30 வரை ஆகும். இருப்பினும் சில பதவிகளுக்கான வயது வரம்பு தகுதியில் மாற்றம் உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தவிர தேர்வு முறை குறித்த அறிவிப்புகளும் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் கேட்கப்படும். அதனை தொடர்ந்து பாடத்திட்டமும் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். மேலும் எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். அதிலும் தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!