இந்தியாவில் மார்ச் 31ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் மார்ச்31ம் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவடையவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் தொற்று எண்ணிக்கையில் ஏதேனும் அதிகரிப்பு காணப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் நீக்கம்:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா இரண்டாம் அலையால் அனைத்து மாநிலங்களும் நோய் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. முதல் அலையில் இல்லாத அளவு பாதிப்பு எண்ணிக்கை இரண்டாம் அலையில் உயர்ந்தது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தில் இருந்தது. இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்தது. இந்த நிலையில் தடுப்புப் பணிகளை துரிதப்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது.
BPS 1828 காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு !
இந்த உத்தரவின் பேரில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் காட்டியது. முதலில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி தற்போது 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கையும் குறைத்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 54,633 பேரின் நகைக்கடன் தள்ளுபடி – இணைப்பதிவாளர் அறிக்கை!
இந்த நிலையில் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மார்ச் 31 அன்று முடிவடையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் தொற்று அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் பொது இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தால் உடனடியாக தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.