தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டங்களில் திருத்தம்?

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பாடத்திட்டங்களில் திருத்தம்?
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பாடத்திட்டங்களில் திருத்தம்?
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டங்களில் திருத்தம்?

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் அடுத்தாக ஆண்டுக்கான பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் இருக்காது என்று திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இது குறித்த முக்கிய அறிவிப்பை கீழே முழுமையாக பார்ப்போம்.

பாடப்புத்தகங்கள் மாற்றம்:

தமிழகத்தில் இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகமாக இருந்து வந்தது. அதன் காரணமாக மாநிலத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து பல மாதங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளும் தொடங்கப்பட்டது. இந்த வருடம் கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத் தேர்வுக்கான தேதிகளை அறிவித்தார்.

NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – கால அவகாசம் நீட்டிப்பு!

இந்த நிலையில் தற்போது பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பொதுத்தேர்வுகளும் ஆரம்பிக்க உள்ளது. அதனால் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி, மே 28 ஆம் தேதி முடியும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 10 முதல் மே 30 வரை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 11ம் வகுப்பு தேர்வுகள் மே 9 முதல் 31 தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. அடுத்ததாக பொதுத்தேர்வுகள் எழுதாத மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் வைக்காமல் ஆல்பாஸ் செய்யுமாறு அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் திண்டுக்கல் ஐ.லியோனி செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது, தற்போது உள்ள பள்ளி பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதில் ஒன்றிய அரசு என்று இந்த கல்வியாண்டில் மாற்றம் செய்யப்படாது என்றும், ஆளுநரின் அதிகாரங்கள் பற்றிய குறிப்பில் திருத்தம் செய்தல் ஆகிய மாற்றங்கள் எதுவும் வரும் கல்வியாண்டில் கிடையாது. மேலும் அவ்வாறு பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் இருந்தால் அது 2023-24 கல்வியாண்டில் மட்டுமே இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!