NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – கால அவகாசம் நீட்டிப்பு!
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை மே 15ம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும் தேர்வு குறித்த விவரங்களை மாணவர்கள் இணையதளம் வாயிலாக அறியலாம் என்றும் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு:
இந்தியாவில் பொது மற்றும் பல் மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருடம் தோறும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியானதும் இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு தாமதமாக நடத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது.
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 3% அகவிலைப்படி (DA) அதிகரிப்பு!
மேலும் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடப்பாண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதனையடுத்து ஏப்ரல் 2ம் தேதி தொடங்கிய நீட் தேர்வு விண்ணப்ப பதிவுகள் தொடங்கியது. மே 7ம் தேதி வரை மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 6 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மே 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிப்பதற்கான நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 15 இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இரவு 11.50 மணி வரை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 20 நிமிடங்கள் கூடுதலாக தேர்வு தேர்வு எழுத நேரம் வழங்கப்படுகிறது. மாணவர்கள் NTA இணையதளம் வாயிலாக தேர்வு குறித்த விவரங்களை அறிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.