RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்த முழு விவரம் இதோ!

0
RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் குறித்த முழு விவரம் இதோ!
RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் குறித்த முழு விவரம் இதோ!
RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்த முழு விவரம் இதோ!

இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த RRB தேர்வு அடுத்த மாதம் முதல் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தேவையான சில குறிப்புகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

RRB தேர்வு:

இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளால் தொழில்கள் முடங்கியதால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. சாமானிய மக்கள் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் மக்கள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக எவ்வித அரசு போட்டித் தேர்வுகளும் நடைபெறவில்லை. அதனால் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். தடுப்பு பணியாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் கட்ட்டுப்பாடுகளும் தொடர்கிறது.

SBI, HDFC, Kotak Mahindra வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – FD வட்டி விகிதங்கள்!

இதனால் ஓரளவு பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்துள்ளது. இந்த நிலையில் RRB குரூப் D தேர்வு பிப்ரவரி மாதம் 23ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்ற தகவல் வந்துள்ளது. மேலும் 1,03,769 காலியிடங்கள் நிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த RRB குரூப் D தேர்வு ராக் மெயின்டெய்னர் கிரேடு-IV, உதவியாளர்/உதவியாளர் தொழில்நுட்பத் துறை பணியிடங்கள் அசிஸ்டெண்ட் பாயிண்ட்ஸ் மேன் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டு இத்தேர்விற்கு சுமார் 2 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் ஜன.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இத்தேர்வில் பொது அறிவியலில் இருந்து 25 கேள்விகளும், கணிதத்தில் இருந்து 25 கேள்விகளும், பொது நுண்ணறிவு மற்றும் ரீசனிங்கில் இருந்து 30 கேள்விகளும், பொது விழிப்புணர்வு மற்றும் நடப்பு நிகழ்வுகளில் இருந்து 20 கேள்விகள் என மொத்தம் இந்தத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்கள் வழங்கப்படும். NCERT புத்தகங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும் அதை படிப்பது சிறந்தது. எந்தவொரு கேள்விக்கும் உங்களுக்கு 100% பதில் உறுதியாக தெரியவில்லை என்றால், நீங்கள் அதைத் தவிர்த்து விட்டு அடுத்த கேள்விக்கு செல்ல வேண்டும். தற்போதைய நடப்பு நிகழ்வுகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!