தமிழகத்தில் ஜன.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜன.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜன.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜன.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து மதுரையில் உள்ள குருவித்துறை, உத்தப்பநாயக்கனூர் பகுதிகளில் வருகிற ஜனவரி 20ம் தேதி அன்று மின்தடை ஏற்படும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு:

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கோளாறு காரணமாக தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்படுகிறது. அத்துடன் மின் இணைப்பு கம்பியில் ஏற்படும் மின் பிளவு மற்றும் மின் கசிவு உள்ளிட்டவற்றின் காரணமாகவும் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகளை முறையாக செய்து வருகிறது. அதனால் மாதந்தோறும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அடிப்படை சம்பளம் உயர்வு?

இதனால் மின் விபத்துகள் ஏற்படுவது குறைந்துள்ளது. அதனால் அரசு தொடர்ச்சியாக இதனை பின்பற்றி மின் பராமரிப்பு பணிகளை சரி செய்து வருகிறது. இதனை தொடர்ந்து மதுரையில் உள்ள குருவித்துறை, உத்தப்பநாயக்கனூர் துணை மின் நிலையங்களில் வருகிற ஜனவரி 20ம் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்று மின்வாரிய பொறியாளர் ச.அழகு மணிமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதன்படி சோழவந்தான் துணை மின் நிலையம் தென்கரை பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவாா்பட்டி, தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வருகிற வியாழக்கிழமை அன்று (ஜன.20) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்றும் அறிவித்துள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்கு பரிசுகள் கிடையாது – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மேலும் மொண்டிக்குண்டு உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான உத்தப்பநாயக்கனூா், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவாா்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூா், புதுக்கோட்டை, சீமானுத்து, துரைச்சாமிபுரம்புதூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை அன்று மின் விநியோகம் இருக்காது என்றும் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!