மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

உத்திர பிரதேச மாநிலம் நொய்டா மாநகரத்தில் தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

முழு ஊரடங்கு

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் வழக்குகளை கவனத்தில் கொண்டு நொய்டா மாவட்ட நிர்வாகம் தற்போது அமலில் இருந்து வரும் கொரோனா கட்டுப்பாடுகளை அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது, உத்திர பிரதேச மாநிலம் நொய்டா மாநகரத்தில் சுமார் 1,000 செயலில் உள்ள கொரோனா வழக்குகளை தாண்டியபோது கடந்த ஜனவரி 5 ஆம் தேதியன்று நோய் தடுப்பு தொடர்பான கட்டுப்பாடுகள் முதன் முறையாக அறிவிக்கப்பட்டன.

RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்த முழு விவரம் இதோ!

இப்போது ஜனவரி 5ம் தேதி அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பதற்கு நொய்டா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இந்த ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சேவைகள் மற்றும் தடை செய்யப்பட்ட செயல்பாடுகள் அனைத்தும் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, அனைத்து நாட்களிலும் இரவு 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

  • நீச்சல் குளங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • உணவகங்கள் மற்றும் திரையரங்குகள் 50 சதவீத திறனில் செயல்படலாம்.
  • அலுவலகங்களில் வருகையை 50 சதவீதமாகக் குறைக்கவும், ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
  • திருமணங்களுக்கு 100 பேர் மட்டுமே மூடிய இடத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
  • திறந்தவெளியில் நடைபெறும் திருமணங்களில் 50 சதவீத இடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடப்படும்.
  • இதற்கிடையில் உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஜனவரி 13ம் தேதியன்று 14,765 புதிய கொரோனா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!